அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
வீண் தர்க்கம் செய்தல்
ஹதீஸ் 1 :
”நேர்வழியை அடைந்த சிலர் நேர்வழி பெற்றப் பிறகு, வீண் தர்க்கத்தை செய்தே தவிர வழிகெடுவதில்லை” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-அபூ உமாமா (ரலி)
-திர்மிதீ , இப்னுமாஜா
ஹதீஸ் 2 :
”ஒருவர் வீண் தர்க்கத்தை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் கீழ் பகுதியில் ஒரு வீடு கட்டித்தரப்படும்,ஒருவர் தகுதியானதாக இருப்பினும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டால் அவருக்காக சொர்க்கத்தின் நடுவில் அவருக்காக வீடு கட்டப்படும். ஒருவர் தன் குணத்தை அழகாக்கி வைத்துக்கொண்டால் சொர்க்கத்தின் உயர்ப்பகுதியில் வீடு கட்டப்படும்.” என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-அபூ உமாமா (ரலி)
-அபூதாவூத் ,திர்மிதீ, இப்னுமாஜா,பைஹகீ
ஹதீஸ் 3 :
"அல்லாஹ்விடம் மனிதர்களில் அதிக கோபத்திற்குரியவர்கள் வீண் தர்க்கம் புரிவதில் கைதேர்ந்தவர்கள்தான் ”என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-ஆயிஷா (ரலி)
-புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ
ஹதீஸ் 4 :
"குர்ஆன் விஷயத்தில் தர்க்கம் புரிவது, இறை மறுப்புச் செயலாகும்.”என்று நபி(ஸல்) கூறினார்கள்.
-அபுஹீரைரா(ரலி)
-அபுதாவூத், இப்னுஹிப்பான்.
குறிப்பு : மேலும் விபரங்களுக்கு ஹதீஸ்களைப் பார்க்கவும்.
No comments:
Post a Comment