125x125 Ads1

125x125 Ads1

Tuesday, November 6, 2012

ஆண்மைக் அழகு தாடி வளர்த்தல்

“மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விடுங்கள்!” (நபிமொழி)
அறிவிப்பவர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு
நூல் : புகாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
“இணை வைப்பவர்களுக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“நெருப்பை வணங்குவோருக்கு மாறு செய்யுங்கள்! தாடியை விடுங்கள்!” (முஸ்லிம்)
“அல்லாஹ்வின் தூதரே! தாடியை யூதர்கள் சிரைக்கின்றனர்’ மீசையை(ப் பெரிதாக) வளர்க்கின்றனர்” என்று நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டபோது, “நீங்கள் மீசையைக் கத்தரியுங்கள்! தாடியை விட்டு விடுங்கள்! யூதர்களுக்கு மாறு செய்யுங்கள்! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு
நூல் : அஹ்மத்
தாடியை வலியுறுத்தி, நபி ஸல்லல்லரு அலைஹி வஸல்லம் அவர்களின் உத்தரவு மிகவும் தெளிவாக உள்ளது. இதில் மாற்றுக் கருத்துக் கொள்ள அறவே இடமில்லை.
மேற்கூறிய நபிமொமிகளை அடிப்படையாகக் கொண்டு, அறிஞர்களில் சிலர் “தாடியை சிறிதளவும் குறைக்கக் கூடாது” என்று கருதுகின்றனர். இன்னும் சில அறிஞர்கள் குறைத்துக் கொள்ளலாம் என்று கருதுகின்றனர். இரண்டாவது தரப்பினரின் கருத்தே சரியானது என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவற்றைப் பார்ப்போம்.
“இப்னு உமர்(ரழி) அவர்கள் ஹஜ், உம்ராச் செய்யும் போது, தங்கள் தாடியிலிருந்தும், மீசையிலிருந்தும் (சிறிது) குறைத்துக் கொள்வார்கள்” அறிவிப்பவர் : நாபிவு(ரழி) நூல்கள் : புகாரி, முஅத்தா
“இப்னு உமர் (ரழி) அவர்கள் தன் தாடியில் ஒரு பிடிக்கு மேல் உள்ளதை நீக்கக் கண்டேன்” என்று மர்வான்(ரழி) அறிவிக்கின்றார்கள். (நூல் : அபூதாவூது)
இப்னு உமர் (ரழி) அவர்களின் இந்தச் செயல், தாடியைக் குறைக்கலாம் என்பதற்குத் தெளிவான ஆதாரமாகும். இப்னு உமர்(ரழி) அவர்கள், ஸஹாபாக்களின் வித்தியாசமானவர்கள். நபி(ஸல்) அவர்களின் எல்லாச் செயல்களையும் அப்படியே பின்பற்றக் கூடியவர்கள். நபி(ஸல்) அவர்களின் தற்செயலான காரியங்களையும் கூட அவர்கள் பின்பற்றக் கூடியவர்கள்.
நபி(ஸல்) அவர்கள் எந்த இடத்திலாவது தன் ஒட்டகத்தை சிறிது நேரம் நிறுத்தினால் – அந்த இடத்திற்கு அவர்கள் செல்ல நேர்ந்தால் – அந்த இடத்தில் தனது ஒட்டகத்தை நிறுத்துவார்கள். (அல் இஸாபா, பாகம் 2, பக்கம் 349) இது போன்ற காரியங்களில் எல்லாம் நாம் அப்படியே செய்ய வேண்டியதில்லை. எனினும், இப்னு உமர்(ரழி) அவர்கள் இது போன்ற செயல்களையும் அப்படியே பின் பற்றியவர்கள்.
அவர்கள் தங்களின் தாடியைக் குறைத்திருந்தால், நபி (ஸல்) அவர்களின் முன் மாதிரி இன்றி நிச்சயம் செய்திருக்க மாட்டார்கள் என்று நம்பலாம். ‘தாடியை விட்டு விடுங்கள் என்ற ஹதீஸ் இப்னு உமர்(ரழி) அவர்களுக்கு தெரியாமலிருக்கலாம் என்றும் கருத முடியாது, அந்த ஹதீஸை அறிவிப்பதே இப்னு உமர்(ரழி) அவர்கள் தான். ஹதீஸை அறிவிக்கக் கூடிய இப்னு உமர்(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளார்கள் என்றால், ்குறைக்கலாம் என்பதற்கு சரியான ஆதாரமாகும்’.
“தாடியை விட்டு விடுங்கள்! என்ற இன்னொரு ஹதீஸை அபூ ஹுரைரா(ரழி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அந்த ஹதீஸை அறிவிக்கின்ற அபூஹுரைரா(ரழி) அவர்களே தன் தாடியைக் குறைத்துள்ளனர் என்று இமாம் நவபீ(ரஹ்) அவர்கள் ‘ஷரஹுல்’ முஹத்தப் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.

Friday, May 18, 2012

அழைப்புப் பணி

நன்மைகளின் பால் அழைப்பவன் அதைச் செய்பவன் போன்றவனாவான்.’ (நூல்: திர்மிதி-2662) அழைப்புப் பணி என்பது, நபிகளார் நம் ஒவ்வொருவரினதும் கரங்களில் ஒப்படைத்துச் சென்ற ‘அமானத்’ ஆகும். இதனையே நபி(ஸல்) அவர்கள் ஓரிலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மத்தியில் தனது இறுதி ஹஜ்ஜின் அரபாப் பேருரையின் போது ”மக்களே நான் எத்தி வைத்து விட்டேனா? என இரு முறை வினவி, இறைவா நீயே சாட்சியாக இரு என்று மூன்று முறை கூறினார்கள். பின்னர் இஸ்லாமிய மார்க்கத்தின் பல்துறைகளையும் எடுத்துக் கூறி, வந்தவர் வராதவருக்கு எத்தி வைத்துவிடுங்கள் என்றதொரு அமானத்தையும் அந்த இடத்தில் கூறிவைத்தார்கள்.’ (அறிவிப்பவர்: அபூபக்ரா(ரழி), நூல்: புஹாரி-7078) அதனை மேலும் வலியுறுத்தும் விதமாக, ”என்னிடமிருந்து ஒரேயொரு (சிறு)செய்தி கிடைத்தாலும் சரி, அதை(ப் பிறருக்கு) எடுத்துரையுங்கள். பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள். அதனால் குற்றமில்லை. எவன் என்மீது (நான் சொன்னதாக) வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றா னோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் என்று அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி) நூல்: புஹாரி-3461) நபி(ஸல்) அவர்களின் பிரச்சாரப் பணி முழுமை பெற்றதை இறைவன் ‘இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன்.’ (அல்குர்ஆன் 05:03)என்று இதனை மேலும் உறுதி செய்கின்றான். இப்பாரிய பணியை அனந்தரமாகப் பெற்ற ‘தாஈ’களே உலமாக்கள். இவர்கள்தான் நபிமார்களின் வாரிசுகள். இந்த ‘தாஈ’கள் வெறும் சடவாதிகள் அல்ல. உள்ளதை உள்ளபடி எத்திவைப்பதுதான் இவர்களது பணி. இதனையே அல்குர்ஆன் தெளிவாகப் பறைசாற்றுகின்றது ”அவர்களுக்கே அழ்ழாஹ் நேர்வழி காட்டினான். எனவே, அவர்களின் வழியை (முஹம்மதே!) நீரும் பின்பற்றுவீராக! இதற்காக உங்களிடம் எந்தக் கூலியையும் நான் கேட்கவில்லை. இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை எனக் கூறுவீராக!’ (அல்குர்ஆன் 06:90) நபிமார்கள்தான் இவர்களது முன்மாதிரிகள். மனைவியாக இருந்தாலும், தந்தையானாலும், அரசியல்வாதிகளாக இருந்தாலும் சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய தருணத்தில் சொல்லி வைப்பார்கள். வெள்ளிமேடைகளில் ஒரு பத்வாவும், தனது குடும்பமென்றால் மற்றொரு தீர்ப்பும், தான் சந்திக்கும் அரசியல்வாதிகள் என்றால் ஒரு நியாயமும் காட்டவே மாட்டார்கள். நபிமார்களின் வாழ்வும் தியாகமும் இவர்களில் பிரதிபலிக்கும். இவர்கள் யாருக்கும் விலை போகமாட்டார்கள். சத்தியத்தை எடுத்துரைப்பதால் இத்தனை நாளும் தான் கட்டிக்காத்த கௌரவமும், கண்ணியமும் சரிந்து போவதை அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள். தோற்றத்தில் இந்த ‘தாஈ’கள் சற்று பலவீனர்களாகக் கூடத் தெரியலாம். புகழ்மிகு குடும்பப் பின்னணியும் இல்லாதிருக்கலாம். தஃவா களத்திற்கு வருகின்ற ‘தாஈ’கள் தனது தந்தையின் பெயரும், பதவியும் நான்கு பேர் மெச்சுகின்ற வண்ணம் அமைந்திருந்தால்தான் சத்தியப் பிரச்சாரம் செய்யமுடியும் என்பதில்லை. ஒரு ‘தாஈ’ சாதாரண கூலித்தொழிலாளியின், அங்காடி வியாபாரியின், ஏன் மார்க்கப் பின்னணியே இல்லாத பிச்சைக்காரனின் மகனாகவும் இருக்கலாம். மாறாக, தான் சொல்லும் செய்தியில் உண்மையும், உறுதியும் இருந்தால் அவனே உயர்ந்தவன். ஏழைக்கொரு சட்டம், பணக்காரர்களுக்கொரு பத்வா என்று யூதப் பாதிரிகள் சத்தியத்தை மறைத்தது போன்று துரோகம் செய்யவுமாட்டார்கள். ”தம் கைகளால் நூலை எழுதி, அதை அற்ப விலைக்கு விற்பதற்காக இது அழ்ழாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுவோருக்குக் கேடுதான். அவர்களின் கைகள் எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது. (அதன் மூலம்) சம்பாதித்ததற்காகவும் அவர்களுக்குக் கேடு உள்ளது.’ (அல்குர்ஆன் 02:79). இவ்வாறு அழ்ழாஹ்வின் சாபத்தை விட்டும் சத்தியத்தை சொல்கின்ற இந்த ‘தாஈ’கள் தங்களை தற்காத்துக் கொள்வார்கள். முன்வைக்கின்ற செய்தியிலும், நடைமுறைப்படுத்துவதிலும் இறையச்சமே இவர்களது இலக்கு. யாருடைய பாராட்டல், கரகோசங்களும் அல்லது விமர்சனங்கள், தூற்றல்களும் இவ் இறையச்சத்திலிருந்து இவர்களை இம்மியளவும் திசை திருப்பாது. ‘ ‘அழ்ழாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அழ்ழாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அழ்ழாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான்.’ (அல்குர்ஆன் 65:02) எந்த சந்தர்ப்பத்திலும் நீதி, நேர்மை தவறவேமாட்டார்கள். இறைத்தூதரின் ஒரு செய்தியை ஆழமாக நம்புவார்கள். ‘அநியாயக்கார அரசனுக்கு முன்பு சத்தியத்தை முன்மொழிவதே மிகச்சிறந்த அறப்போராகும்.’ (அறிவிப்பவர்: அபூ உமாமா(ரழி), நூற்கள்: அஹ்மத்-18446, இப்னுமாஜா-4009) எது நடந்தாலும் ‘மறுமை’ என்ற ஒன்று உண்டு அப்போது அந்த வல்ல நாயனின் தீர்ப்பே இறுதியானது என்ற உறுதி இந்த ‘தாஈ’களிடம் மிகைத்திருக்கும். மிம்பர்களில் நீதியையும், நியாயத்தையும் வெளிப்படுத்தாது விட்டால் இவர்கள் எப்படி ‘தாஈ’களாக இருக்க முடியும். பொய், புரட்டு, குரோதம் இவர்களிடம் இருக்கவே கூடாது. ஆனாலும், ‘குரங்கின் கையில் அகப்பட்ட பூமாலை’ போன்று மிம்பர்களை அசிங்கப்படுத்தும் தாஈகளும் இல்லாமல் இல்லை. ‘நம்பிக்கை கொண்டோரே! அழ்ழாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அழ்ழாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அழ்ழாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.’ (அல்குர்ஆன் 05:08) நீதி, நேர்மை இல்லாதவர்களிடம் இறையச்சம் இராது. இறையச்சம் இல்லாதவர்கள் நபிமார்களை முன்மாதிரியாகக் கொண்டு தஃவாவை எங்கே முன்னெடுக்கப் போகின்றார்கள். பொதுவாக ஒரு தாஈயானவர் தனது தஃவாப் பணியின் பிரதிபலன் மறுமையில்தான் என்பதை நம்ப வேண்டும். பதவி உயர்வுகளும், பதவி நீக்கங்களும் இந்த தாஈகளின் தஃவாவில் எப்பாதிப்பையும் ஏற்படுத்தாது. இறுதியாக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறிய முனாபிக்கின் தன்மைகள் ‘தாஈ’களிடம் மருந்திற்குக் கூட இருக்கக் கூடாது. ‘ ‘நான்கு பண்புகள் எவனிடம் உள்ளனவோ அவன் வடிகட்டிய நயவஞ்சகன் ஆவான். அவற்றில் ஏதேனும் ஒன்று யாரிடமேனும் இருந்தால் அதை விட்டொழிக்கும்வரை நயவஞ்சகத்தின் ஒரு பண்பு அவனிடம் இருந்து கொண்டே இருக்கும். நம்பினால் துரோகம் செய்வான். பேசினால் பொய்யே பேசுவான். ஒப்பந்தம் செய்து கொண்டால் அதை மீறுவான். விவாதம் புரிந்தால் நேர்மை தவறிப் பேசுவான்.’ (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ரழி), நூல்: முஸ்லிம்-106) ஆகையால் மரணத்தையும், மறுமையையும் பயந்து வார்த்தையில் உறுதியும், வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தலும், இறையச்சமும் கொண்டு அழைப்புப் பணியை செவ்வனே செய்ய ‘தாஈ’கள் முன்வரவேண்டும். எல்லாம் வல்ல அழ்ழாஹ் நம் அனைவரையும் இறையச்சமுள்ள தாஈகளாக ஆகுவதற்கு துணை புரிவானாக!

Saturday, March 24, 2012

பெற்றோரைப் பேணுதல்

திருக்குர்ஆனிலும் ஸுன்னாவிலும் இறைவழிபாட்டுக்கு அடுத்தபடியாகச் செய்யப்படும் கட்டளை பெற்றோருக்குரிய உரிமைகளைப் பற்றியேயாகும். எனவே, மனிதனின் உரிமைகளில் முதன்மையானது பெற்றோரின் உரிமைகளாகும்.
பெற்றோரைப் பேணுவதன் அவசியம்
பெற்றோரைப் பேணுவதன் அவசியம், அதன் முக்கியத்துவம், மகத்துவம் போன்றன பற்றி திருமறை குர்ஆன் பல இடங்களில் மிக அழுத்தமாக எடுத்துரைக்கின்றது. அல்லாஹ் கூறுகின்றான்:
وَقَضَى رَبُّكَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

இஸ்லாம் மார்க்கத்தில் மட்டுமன்றி அதற்கு முந்திய மார்க்கங்களிலும் பெற்றோரைப் பேணுவதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இறைவன் பனூ இஸ்ராஈல்களிடம், பெற்றோரைப் பேணி நடக்கும்படி வாக்குறுதி எடுத்துக் கொண்டான். அல்லாஹ் கூறுகின்றான்,
“அவனையன்றி வேறு எவரையும் நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கிறான்” (இஸ்ரா: 23).
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

‘நான் நபி (ஸல்) அவர்களிடம் செயல்களில் இறைவனுக்கு மிகவும் விருப்பமானது எது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு எந்தச் செயல் இறைவனுக்கு விருப்பமானது? என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், ‘பெற்றோருடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்’ என்று கூறினார்கள். இதற்குப் பிறகு (எது?) என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள் ‘இறை பாதையில் (உழைப்பது) போர் புரிவது’ என்று கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)
பெற்றோரைப் பேணி நடத்தல் என்பது, தாய் - தந்தை இருவரையும் பேணிக் கொள்வதைக் குறிக்கும். எனவே, ஷரீஆவில் பெற்றோர் நலம் பேணுவது பற்றி பொதுவாகக் குறிப்பிடப்படும் அதேவேளை ஆங்காங்கே தாயைப் பேணுவது பற்றியும், தந்தையைப் பேணுவது பற்றியும் தனித்தனியேயும் குறிப்பிடப்பட்டுள்ளன.

தாயைப் பேணி நடப்போம்
ஒரு பெண் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.
பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். எனவேதான் இறைவன் கீழ்வரும் வசனங்களில் தாயைப் பேணுவதன் அவசியத்தை வலியுறுத்திக் கூறியுள்ளதைக் காண முடிகின்றது.
“இன்னும், நினைவுகூருங்கள். நாம் இஸ்ராஈல் மக்களிடத்தில், ‘அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்கக் கூடாது. உங்கள் பெற்றோருக்கும் நன்மை செய்யுங்கள்’ என்று உறுதிமொழி வாங்கினோம்” (அல்-பகறா: 83).
இவ்வசனத்திலே தாய் - தந்தையருக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளுக்கு அடுத்தபடியாக, இறைவணக்கத்துடன் இணைத்துக் கூறியுள்ளான். இதிலிருந்து பெற்றோரைப் பேண வேண்டியதன் அவசியம் தெளிவாகிவிட்டது.
وَإِذْ أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لاَ تَعْبُدُونَ إِلاَّ اللّهَ وَبِالْوَالِدَيْنِ إِحْسَاناً

அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ

“நாம் மனிதனுக்கு, தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யவேண்டியது பற்றி உபதேசம் செய்தோம்” (லுக்மான்: 14 ).
அல்லாஹ் கூறுகின்றான்:
وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا

“மனிதன் தன் பெற்றோர் இருவருக்கும் உபகாரம் செய்யும்படி நாம் உபதேசம் செய்தோம்” (அல்-அஹ்காப்: 15).
தாய்க்கு செய்ய வேண்டிய கடமைகளை வலியுறுத்துகின்ற ஏராளமான நபிமொழிகள் காணப்படுகின்றன. அபூஹுரைரா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
‘ஒரு தோழர், நபி (ஸல்) அவர்களின் அவைக்கு வந்து, ‘நான் சேவை செய்வதில் முதல் தகுதி யாருக்கு?’ என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்குகடுத்த தகுதி யாருக்கு?’ என்றார் அந்தத் தோழர். அதற்கும் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தாய்’ என்றார்கள். ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ என மீண்டும் கேட்டார் வந்த தோழர். மூன்றாம் முறையாகவும் அதே பதிலையே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுபடியும் அத்தோழர், ‘அதற்கடுத்த தகுதி யாருக்கு?’ எனக் கேட்க அண்ணல் நபி (ஸல்) அவர்கள், ‘உமது தந்தை’ என்று பதிலளித்தார்கள். (நூல்: முஸ்லிம்)
இந்நபி மொழியில் மூன்று முறை தாய் என்று பதிலளித்துவிட்டு, நான்காம் முறையாக தந்தை என்று பதிலளித்துள்ளதைக் காண முடிகின்றது. இதிலிருந்து தந்தை நலம் பேணுவதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை. என்றோ, அதிக கவனம் செலுத்தவில்லை என்றோ அர்த்தம் கொள்ளக் கூடாது. எனினும், நபியவர்கள் முதல் மூன்று முறையிலுமே, தாய், தாய், என்று கூறியதிலிருந்து, தாய்க்குச் சேவை செய்வதில் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், தாயைப் பேணுவதை முதன்மையாகக் கருத வேண்டும் என்பதையும் நமக்கு உணர்த்துகின்றது.
ஒருமுறை நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களிடம், ‘எஜமானனிடம் நல்ல அடிமையாக இருப்பவனுக்கு இரு விதமான நன்மைகள் கிடைக்கும்’ எனக் கூறினார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த அபூஹுரைரா (ரழி) அவர்கள், ‘இஸ்லாத்தில் அதிகமான நன்மைகளைப் பெற்றுத் தரும் ஜிஹாதும் ஹஜ்ஜீம், தாய்க்கான சேவையும் இல்லையென்றால், காலம் முழுதும் அடிமையாக வாழ்ந்து மடிவதையே விரும்புவேன்’ என்றார். (நூல்: முஸ்லிம்)
குழந்தை வளர்ப்பு முதல், அனைத்துக் கருமங்களிலும் பெற்றோர் இருவருக்கும் பங்கிருக்கிறது. என்றாலும் தாய்க்குத்தான் குழந்தையின் மூலம் ஏற்படும். இன்னல்கள் அதிகம். எனவேதான் இஸ்லாம் தந்தையை விடவும் தாய்க்கு சேவை செய்வதை முற்படுத்திக் கூறியுள்ளது.

தந்தையைப் பேணி நடப்போம்
ஒரு தந்தை பிள்ளைகளின் மாபெரும் உபகாரியாவார். தனது பிள்ளைகளுக்காகவும், குடும்பத்துக்காகவும் இரவு பகலாக, வெயிலென்றும் மழையென்றும் பாராது உழைக்கின்றார். பொருளாதார ரீதியாக தன் குடும்பம் கஷ்டப்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றார். வியர்வை சிந்தி உழைத்ததைப் பிள்ளைகளின் நலனுக்காகச் செலவு செய்கின்றார். எனவேதான் தந்தையைப் பேணி நடப்பது பற்றியும் குறிப்பாக சில நபிமொழிகள் இடம்பெற்றுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்த மகனும் தன் தந்தைக்கு கைமாறு செய்ய முடியாது. அடிமையாக எந்தத் தந்தையாவது இருந்தால், அவரை விலைக்கு வாங்கி உரிமை வழங்கப்படும்.
நூல்: திர்மிதீ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தந்தையின் திருப்தியில் அல்லாஹ்வின் திருப்தியும், தந்தையின் அதிருப்தியில் அல்லாஹ்வின் அதிருப்தியும் உள்ளது’
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரழி)
நூல்: ஸஹீஹுல் ஜாமிஉ 3500, ஸில்ஸிலா ஸஹீஹா 516
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தந்தை சுவன வாயில்களில் மத்திய வாயில் ஆவார்.
அறிவிப்பவர்: அபுத் தர்தா (ரழி)
நூல்: ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப்
ஒரு தந்தை செய்யும் உபகாரங்களுக்குக் கைமாறு செய்ய ஒருபோதும் முடியாது. எவ்வளவுதான் அவருக்கு நாம் உபகாரம் செய்த போதிலும், அவர் எமக்காகச் செய்த நலன்களுக்கும், தியாகங்களுக்கும் ஈடாகாது. எவர் தன் வாழ்வில் தந்தையை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறாரோ அவருக்கு அல்லாஹ்வின் மகிழ்ச்சி கிடைக்கும். எனவே, தந்தையின் உரிமைகளையும், மரியாதையையும் பேணும் மனிதன் சுவனத்துக்குத் தகுதியானவன் ஆகிறான்.
அல்லாஹ் மிக அறிந்தவன்.

Friday, February 24, 2012

குர்ஆன் ஓதுங்கள்!

நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆன் ஓதுங்கள்! நிச்சயமாக குர்ஆன் கியாமத் நாளில் தன் தோழர்களுக்குப் பரிந்துரை செய்யக்கூடியதாக வரும். (முஸ்லிம்: அபூ உமாமா (ரலி))


இறைமறையை நாம் ஓதும்போது மறுமை நாளில் அது நமக்கு பரிந்துரை செய்கிறது. நரக நெருப்பை விட்டும் அது நம்மை காப்பாற்றுவதாக அமைகிறது. இன்னும் நன்மைத் தட்டு கனக்க காரணமாகிறது. மேலும் பல்வேறு நன்மைகளை நமக்கு கிடைக்கச் செய்கிறது.


நபி(ஸல்) கூறினார்கள்: அல்லாஹ்வின் அருள்மறையான குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஒருவர் ஓதுவரானால், அவருக்கு ஒரு நன்மை உண்டு. அந்த ஒரு நன்மை பத்து மடங்கு கொண்டதாகும். அலீப், லாம், மீம் ஓர் எழுத்து என்று நான் கூறமாட்டேன். மாறாக அலிப் ஒர் எழுத்தாகும், லாம் ஓர் எழுத்தாகும், மீம் ஓர் எழுத்தாகும். (மூன்றும் மூன்று எழுத்துகளாகும். அம்மூன்றையும் ஒருவர் ஓதினால் ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் வீதம் முப்பது நன்மைகளைப் பெறுவார்). (திர்மிதி: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி))


நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனைத் திறமையாக நன்முறையில் ஓதுபவர் நல்லோர்களான சங்கைமிகு மலக்குகளுடன் சுவர்க்கத்தில் இருப்பார். குர்ஆனை (இயலாமையால்) கஷ்டப்பட்டவராகத் திக்கித் திக்கி ஓதுகிறவருக்கு இரண்டு நற்கூலிகள் உண்டு. (ஆதாரம் : புகாரி, முஸ்லிம் : ஆயிஷா (ரலி))


பொருளறிந்து உள்ளச்சத்தோடு ஓதுதல்
அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள். (அல்-குர்ஆன் 4:82)

இன்னும் அவர்கள் (சிந்தித்துப்) படிப்பினைகள் பெறுவதற்காக இந்த குர்ஆனில் திட்டமாக(ப் பல்வேறு) விளக்கங்களைக் கூறியுள்ளோம்; எனினும், (இவை யாவும்) அவர்களுக்கு (உண்மையிலிருந்து) வெறுப்பைத் தவிர (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை! (அல்-குர்ஆன் 17:41)


அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்களுடைய இருதயங்கள் ((இருக்கின்றனவே) அவற்றின் மீது பூட்டுப் போடப்பட்டுவிட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)

நபி(ஸல்) கூறினார்கள்: நிச்சயமாக அல்லாஹ் இந்தக் குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்துகளை உயர்த்துகிறான். இன்னும் இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகிறான். (முஸ்லிம்: உமர் பின் கத்தாப்(ரலி))



திருக்குர்ஆனை நிதானமாக ஓதவேண்டும்.
இஷாத் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் வத்தீனி வஸ்ஸைத்தூனி ஸுராவை ஓதினார்கள். அவர்களைவிட அழகான, இனிமையான குரலை எங்குமே நான் கேட்டதில்லை. (புகாரி, முஸ்லிம்: பராவு பின் ஆஸிப் (ரலி))


நபி(ஸல்) அவர்கள் (அபூமூஸாவே) நீர் நபி தாவூது (அலை) அவர்களின் குடும்பத்தினரின் இசைக் கருவிகளில் ஒன்றைக் (இனிய குரலை) கொடுக்கப்பட்டுவிட்டீர். (அபூமூஸா அல்அஷ்அரீ(ரலி)
குர்ஆனை மிக அழகிய இனிமையான குரலில் ஓதக் கூடியவர்களாக இருந்தார்கள்) ((ஆதாரம் : புகாரி, முஸ்லிம் அறிவிப்பாளர் : அபூ மூஸா அல் அஷ்அரி(ரலி))


முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் அபூ மூஸா அல்அஷ்அரி (ரலி) அவர்களிடம், நேற்றிரவு நான் உமது கிராஅத்தைக் கேட்பதை நீர் பார்த்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பீர் எனக் கூறினார்கள்.


குர்ஆன் ஓதுபவரின் மறுமை நிலை மிக்க மகத்தானது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (கியாமத் நாளில்) குர்ஆனை உடையவரிடம், "நீர் குர்ஆனை ஓதுவீராக! அந்தஸ்தால் உயருவீராக, உலகில் எவ்வாறு அதனை நிறுத்தி அழகாக (தஜ்வீதுடன்) ஓதினீரோ அது போன்றே இங்கும் ஓதுவீராக. நீர் ஓதும் கடைசி ஆயத்தின் இடத்தில் உம் அந்தஸ்து உள்ளது" எனக் கூறப்படும். (எவ்வளவு ஆயத்துகள் ஓதுகிறாரோ அவ்வளவு தூரத்துக்கு அவரது அந்தஸ்துகள் சுவர்க்கத்தில் உயர்த்தப்படும்) - (அபூதாவூது, திர்மிதி: அப்துல்லாஹ் பின் அம்ர் இப்னு ஆஸ்(ரலி))


திருக்குர்ஆனை மனனம் செய்வது
நபி(ஸல்) கூறினார்கள்: குர்ஆனை அடிக்கடி ஓதி அதனைப் பேணிப்பாதுகாத்து வாருங்கள். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமாக! (திரும்பத் திரும்ப ஓதி அந்தக் குர்ஆனைப் பாதுகாக்க வில்லையென்றால்) அந்தக் குர்ஆன், கயிற்றால் கட்டப்பட்டிருந்த ஓட்டகை கட்டிலிருந்து விலகி விரண்டோடுவதைவிட மிக வேகமாக (உங்கள் உள்ளங்களிலிருந்து விலகி) விரண்டோடிவிடும். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம். அறிவிப்பாளர் : அபூமூஸா அல் அஷ்அரீ (ரலி))

Sunday, January 29, 2012

இஸ்லாமிய குண நலன்கள்

1. வீரம் உள்ள செயல் எது என்று கூறலாம் ?

பிறர் செய்யும் தீங்கை மன்னித்தல் வீர செயல் ஆகும்.

(காண்க அல்குர்ஆன் 31:17ஃ 42:43)

சிறந்த வீரம்-கோபத்தை அடக்கிக் கொள்ளுதல்.(நபிமொழி)

2. மறுமையில் இறைவனை சந்திக்க நாம் என்ன செய்யவேண்டும் ?

நற்செயல்களை செய்தலும், தன் இறைவனுக்கு இணைவைக்காமல் இருப்பதும். (காண்க அல்குர்ஆன்18:110ஃ29:4

3. இறைவனின் திருப்தி பெற்றோரின் திருப்தியில் உள்ளதா ?

தந்தையின் திருப்தி :

இறைவனின் திருப்தி தந்தையின் திருப்தியில் உள்ளது இறைவனின் கோபம் தந்தையின் கோபத்தில் உள்ளது.

(அறிவிப்பாளர் அப்துல்லாஹ் இப்னு அம்ர்) தப்ரானி.

தாய்க்கு நன்மை செய்வது :

இறைதூதர் அவர்களே நல்லது செய்யப்படத்தகுதியுடையவர் யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்யப்படத் தகுதியுடையவர் யார்? என்று கேட்டேன் உனது தாய் என்று கூறினார்கள்.(மீண்டும்) நல்லது செய்யப்பட தகுதியுடையவர் யார்? எனக்கேட்டேன். உன் தாய் தான் என்று கூறினார்கள் (மீண்டும்) நல்லது செய்ய தகுதியானவர் யார்? எனக் கேட்டேன் உனதுதந்தை அடுத்து (உன்) நெருங்கிய உறவினர்கள், அதற்கும் அடுத்து உறவினர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள் என தன் பாட்டனார் மூலம் தந்தை வழியாக பஹ்ஷ் இப்னுஹகிம் அவர்கள் அறிவிக்கிறார்கள் (ஆதாரம்) திர்மிதி, அபு தாவூத்,

மேலும் காண்க அல்குர்ஆன் 17:24ஃ 31:15)

4 . பெற்றோருக்கு கேட்கக் கூடிய பிரார்த்தனை என்ன?

ரப்பிர்ஹம்ஹூமா கமா ரப்பயானி ஸஃஈரா (பார்க்க அல்குர்ஆன் 17:24)

பொருள்: என் இறைவனே சிறு வயதில் எவ்வாறு என்னை இவர்கள் கருணையுடனும், பாசத்துடனும் வளர்த்தார்களோ அவ்வாறே இவர்கள் மீது நீ கருணை புரிவாயாக

5 . பெற்றோரை திட்டாமல் இருப்பது ?

ஒருவன் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று ஆகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும் (அது) எப்படி ஒருவன் (தன் பெற்றோரைத்) திட்டுவான்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். ஒருவனை இவன் திட்டுவான் அவனோ இவனது தாயையும், தந்தையையும் திட்டுவான்(இது அவனே பெற்றோரை திட்டுவதற்கு சமமாகும்) என்றுநபி (ஸல்) கூறினார்கள். இதை அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதாரம்:புஹாரி,முஸ்லிம்,அபுதாவூத்,திர்மிதி)


தீய குணங்கள்


1 . தற்பெருமை

(நபியே) நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம்.(ஏனெனில்) நிச்சயமாக (இப்படி நடப்பதால்) நீர் பூமியை பிளந்து விடவும் முடியாது. மலையின் உச்சி அளவுக்கு உயர்ந்து விடவும் முடியாது. (அல் குர்ஆன் 17:37)

நரகவாதிகளை உங்களுக்கு அறிவிக்கட்டுமா, தற்பெருமையும், ஆணவமும் கொண்ட ஒவ்வொருவரும் தான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அறிவிப்பவர்: ஹாரிஸா இப்னு வஹப் (ரலி) நூல்: புஹாரி,முஸ்லிம்)

2 . கொடுமை

அநீதி இழைக்கப் பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதிகுறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாக பிரார்த்தனை புரிவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள். (நூல்: புஹாரி)

3 . கோபம்

(பய பக்தியுடையவர்கள்) கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர் (கள் செய்யும் தவறு) களை மன்னிப்பார்கள். (அல் குர்ஆன் 3:134)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்றார். கோபம் கொள்ளாதே! என்றார்கள். பலமுறை கேட்ட போதும், கோபம் கொள்ளாதே! என்றார்கள்.

(அறிவிப்பவர்: அபு ஹூரைரா (ரலி) நூல்: புஹாரி)

4 . பிறர் துன்பத்தை கண்டு மகிழல்

உன் சகோதரனின் துன்பத்தைக் கண்டு மகிழாதே! இறைவன் அவன் மீது கருணை புரிந்து, உன்னை துன்பத்தில் ஆழ்த்திவிடுவான். (நூல்: திர்மிதி).

5. பொய்

எவன் பொய்யனாகவும், நிராகரிப்பவனாகவும் இருக்கிறானோ அவனை அல்லாஹ் நேர் வழியில் செலுத்துவதில்லை (அல் குர்ஆன்:39:3)

சந்தேகமானதை விட்டுவிட்டு உறுதியான விசயத்தை நீ எடுத்துக்கொள் (ஏனெனில் ) உண்மை மன நிம்மதி தரக்கூடியது. பொய் சந்தேகமானது என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர் ஹஸன் (ரலி) நூல்கள்:அஹமத், நஸயீ, திர்மிதி, இப்னு ஹிப்பான்)

6. கெட்டவற்றை பேசுதல்

எப்போதும் குறை கூறிக் கொண்டே இருப்பவனும் சபிப்பவனும், ஆபாசமாகவும் அற்பமாகவும் பேசுபவனும் இறைநம்பிக்கையாளன் அல்லன். (நூல்:முஸ்லிம்)

7. இரட்டை வேடம் போடுதல்

மறுமை நாளில் மனிதர்களில் கெட்டவர்களாக இரண்டுமுகம் உடைய (இரட்டை வேடதாரிகளை) பார்ப்பீர்கள். ஒருமுகத்துடன் (ஒரு கூட்டத்திடம்) செல்வார்கள். வேறுமுகத்துடன் ( இன்னொரு நேரத்தில் அக்கூட்டத் திடம்) செல்வார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அதாவது தனதுகொள்கையை சந்தர்ப்பத்திற்கு தகுந் தவாறு மாற்றிக் கொள்வார்கள்) (அறிவிப்பவர்:அபுஹூரைரா (ரலி)நூல்கள்:புஹாரி, முஸ்லிம்)

8. பாரபட்சம் காட்டுதல்

நபி (ஸல்) கூறினார்கள் (இன மத மொழி) வெறியின் அடிப்படையில் மக்களை அழைப்பவன் நம்மை சார்ந்தவன் அல்லன். அதற்காக போராடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். அதற்காக உயிரை விடுபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன். (நூல்:அபுதாவூத்)

முஃமின்களே நீங்கள் நீதியின் மீது நிலைத்திருப்பவர்களாகவும் உங்களுக்கோ அல்லது(உங்கள்) பெற்றோருக்கோ அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருப்பினும் அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாகவும் இருங்கள் (நீங்கள் யாருக்காக சாட்சியம் கூறுகிறீர்களோ) அவர்கள் செல்வந்தர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் (உண்மையாக சாட்சி கூறுங்கள்) (அல் குர்ஆன்:4:135)

9. வரம்பை மீறிய புகழ்ச்சி –

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள்: அதிகம் புகழக் கூடியவர்களை நீங்கள் கண்டால் அவர்கள் முகத்தில் மண்ணை வாரிப் போடுங்கள் (அறிவிப்பாளர்:மிக்தாத் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்ஃ மிஷ்காத்)

10. பரிகாசம்

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஏனெனில் (பரிகசிக்கப் படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப்பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம்செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் இன்னும் உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும்(உங்களில்) ஒருவரைடியாருவர் (தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள் . ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய)பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும் எவர்கள்(இவற்றிலிருந்து மீழவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரராவார்கள். (அல் குர்ஆன் 49:11)

11. வாக்குறுதி மீறல்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள். நிச்சயமாக வாக்குறுதி (பற்றி) மறுமையில் விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:34)

நயவஞ்சகனின் அடையளங்கள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான், வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான், நம்பினால் மோசடி செய்வான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புஹாரிஃ முஸ்லிம்)

12. சண்டை

அல்லாஹ்விடம் மனிதர்களிலேயே மிகவும் வெறுப்புக்குரியவன் கடுமையாக (எப்போது பார்த்தாலும்) சச்சரவு செய்து கொண்டிருப்பவனேயாவான் . இதனை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல்:புஹாரி)

13. குறை கூறல்

குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அல் குர்ஆன் 104:1)

இறை நம்பிக்கையாளர்களே! உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேசவேண்டாம். உங்களில் யாராவது ஒருவர்தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தை புசிக்கவிரும்புவாரா, (இல்லை!) அதை நீங்கள் வெறுப்பீர்கள். மேலும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீளுவதை அல்லாஹ் ஏற்றுக்கொள்பவன் மிக்க கருணையாளன். (அல் குர்ஆன் 49:12)

14. பொறாமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பொறாமையைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நெருப்பு விறகை விழுங்கி விடுவதுபோல் பொறாமை நன்மைகளை விழுங்கிவிடுகின்றது. (அறிவிப்பவர்: அபுஹூரைரா (ரலி), நூல்:அபுதாவூது, மிஷ்காத்)

15. கெட்ட பார்வை

(நபியே) ஈமான் கொண்டவர்கள் தங்கள் பார்வையை (தவறானவைகளிலிருந்து) தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று கூறுவீராக. (அல் குர்ஆன் 24:30)

கண்கள் செய்யும் சைகைகளையும், உள்ளங்கள் மறைத்து வைப்பதையும் அவன் நன்கு அறிகிறான். (அல் குர்ஆன்40:19)

செவி, பார்வை, மனம் இவை ஒவ்வான்றும் மறுமைநாளில் (அதனதன் செயல் பற்றி) நிச்சயமாக விசாரிக்கப்படும். (அல் குர்ஆன் 17:36)



நற் குணங்கள்

1. நிதானம்

இன்னும் இவர்கள் செலவு செய்தால் வீண் விரயம் செய்யமாட்டார்கள் (உலோபித் தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள். எனினும் இரண்டிற்கும் மத்திய நிலையில் இருப்பார்கள். (அல் குர்ஆன் 25:67)

உன் நடையில் மிக வேகமோ, அதிக சாவதானமோ இல்லாமல் நடுத்தரத்தை மேற்கொள் (அல் குர்ஆன் 31:19)

2. எளிமை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் கேட்கவில்லையா, 'எளிமை என்பது ஈமானின் (இறைநம்பிக்கையின்) அடையாளமாகும் திண்ணமாக எளிமை என்பது ஈமானின் அடையாளமாகும்.' (அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்கள்:அபுதாவூத், மிஷ்காத்.

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது கூறினார்கள் : முஆதே! சொகுசு வாழ்க்கையைத் தவிர்த்துக் கொள் ஏனெனில் அல்லாஹ்வின் அடியார்கள் சொகுசு வாழ்க்கை வாழ்பவர் அல்லர் (அறிவிப்பவர்: முஆது இப்னு ஜபல் (ரலி) நூல்:முஸ்னத் அஹ்மத் மிஷ்காத்)

3. தூய்மை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை ஈமானின் -இறை நம்பிக்கையின் பாதி அங்கமாகும் (அறிவிப்பாளர்: அபு மாலிக் அல் அஷ் அரி (ரலி) நூல்: முஸ்லிம்)

(நபியே!) உனது ஆடைகளை தூய்மையாக வைத்துக்கொள்வீராக! (அல்குர்ஆன் 74:4)

4. மக்களுக்கு ஸலாம் சொல்லுதல்

மனிதர்களில் அல்லாஹ்விடம் உயர்வானவர்கள் ஸலாத்தினைக் கொண்டு ஆரம்பிப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபுஉமாமா (ரலி) நூல்: அபுதாவூது, திர்மிதி, அஹ்மத்

உனக்கு அறிமுகமானவரோ அறிமுகமில்லாதவரோ எவராயினும் நீ ஸலாம் கூறிக்கொள். இது இஸ்லாத்தின் சிறப்புக்களில் ஒன்றாகும் என பெருமானார் கூறினார்கள். (நூல்: புஹாரி)

5. நாவடக்கம்

இரு தாடைகளுக் கிடையிலும் (நாவையும்) இருதொடைகளுக்கு இடையிலுள்ளதையும் (வெட்கத்தலத்தையும்) பாதுகாத்துக் கொள்வதாக ஒருவன் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்கு சுவனம் கிடைத்திட நான் பொறுப்பேற்கிறேன். (நூல்:புஹாரி)

எவர் இறைவனையும், மறுமையையும் ஏற்றுக்கொள்கிறாரோ அவர் நல்லவற்றைக் கூறவும் அல்லது மௌனமாக இருக்கவும். (நூல்: திர்மிதி)

6. அன்பாக பேசுதல்

கனிவான இனிய சொற்களும் மன்னித்தலும் தர்மம் செய்தபின் நோவினை தொடரும்படி செய்யும் ஸதக்காவை(தர்மத்தை) விட மேலானவையாகும். தவிர அல்லாஹ்(எவரிடத்திலும் எவ்விதத்) தேவையும் இல்லாதவன் மிக்க பொறுமையாளன். (அல் குர்ஆன் 2:263)

7. பிறருக்கு உதவி புரிதல்

நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபில் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புஹாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் இறைநம்பிக்கையாளர் மற்றொரு இறை நம்பிக்கையாளருக்கு கட்டிடத்தைப் போன்றவர். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதிக்கு உறுதுணையாக இருக்கிறது பிறகு நபி (ஸல்)அவர்கள் உதாரணத்திற்கு தங்களுடைய கை விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள். (அறிவிப்பாளர் : அபு மூஸா அஷ்அரி (ரலி), நூல்: புஹாரி, முஸ்லிம், மிஷ்காத்)

8. உண்மை பேசுதல்

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ! உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல் குர்ஆன் 9:119)

விளையாட்டுக்கேனும் பொய்யை விட்டுவிடுபவர்களுக்கு சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (நூல்: அபுதாவூத்)

9. நன்றி செலுத்துதல்

மனிதனுக்கு நன்றி செலுத்தாதவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவர் ஆகமாட்டார். (நூல்: அஹ்மத், திர்மிதி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு நோற்காத ஆனால் நன்றி செலுத்தக் கூடிய ஒரு மனிதன் பொறுமையை மேற்கொண்டு நோன்பு நோற்பவனைப் போன்றவன் ஆவான். (அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரலி) நூல்: திர்மிதிஃ மிஷ்காத்)

10. வெட்கப்படுதல்

திண்ணமாக ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு பண்பு உண்டு. இஸ்லாத்தின் பண்பு நாணமுறுவதேயாகும் . (நூல்: இப்னு மாஜா)

அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மல ஜலம் கழிப்பதற்கு செல்லும்போது பூமியோடு நெருக்கமாகும் வரையில் தமதுஆடையை மேலே உயர்த்தமாட்டார்கள்.(அறிவிப்பவர்:அனஸ் (ரலி) நூல்: புஹாரி, முஸ்லிம்)

11. தவக்கல் (அல்லாஹ்வை சார்ந்திருத்தல்)

அல்லாஹ்வின் மீது தவக்கல் என்னும் முழுப்பொறுப்புச்சாட்டும் முறையில் நீங்கள் முழுமையாக நீங்கள் பொறுப்பு சாட்டினால், பறவைகளுக்கு உணவளிப்பது போன்று அல்லாஹ் உங்களுக்கும் உணவளிப்பான். புறவை காலையில் வயிறு ஒட்டியதாகச் செல்கிறது. மாலையில் வயிறு நிரம்பித் திரும்புகிறது. (அறிவிப்பாளர்: உமர் (ரலி) நூல்: திர்மிதி)

12. தவ்பா (மன்னிப்பு கோருதல்)

எவர் பாவமன்னிப்புக் கோரி, மேலும் நம்பிக்கைக் கொண்டு நற்செயலும் புரிய தொடங்கிவிடுகிறாரோ அத்தகையோரின் தீமைகளை இறைவன் நன்மையாக மாற்றிவிடுவான். (அல் குர்ஆன் 25:70)

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நிச்சயமாக நான், ஒருநாளில் எழுபது முறையைவிட மிக அதிகமாக அல்லாஹ்விடம் பாவம் பொறுத்தருள தேடி, அவனின்பால் பாவமீட்சிப் பெறுகிறேன் என அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: புஹாரி

13. உயிரினங்கள் மீது அன்பு செலுத்துதல் மற்றும் இரக்கம் கொள்ளுதல்

நபி (ஸல் ) அவர்கள் விலங்குகளின் முகத்தில் அடிப்பதைபும், முதுகில் சூடு இடுவதையும் தடுத்தார்கள்.(நூல்: திர்மிதி)

தவறான நடத்தையுடைய பெண் ஒரு நாயைக் கண்டாள். அந்த நாய் தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு ஒருகிணற்றைச் சுற்றி வந்து கொண்டே இருந்தது. உடனே அவள் தனது காலுறைகளை ஒரு துணியில் கட்டி, கிணற்றில்விட்டு தண்ணீர் எடுத்து, அந்த நாய்க்கு புகட்டினாள். இதன்காரணமாக இறைவன் அவளை மன்னித்தான். நூல்: புஹாரி,முஸ்லிம்