125x125 Ads1

125x125 Ads1

Thursday, April 1, 2010

அழைப்பு பணி எப்படி செய்வது

தான் அறிந்த மார்க்கச் செய்தியை, பிறருக்கு எடுத்து கூறுவதே, அழைப்பு பணியாகும். இதற்காக முழுமையாக இஸ்லாத்தை அறிந்திருக்க வேண்டுமென்பது அவசியமில்லை. நாம் கூறும் விஷயத்தில் நமக்கு தெளிவிருந்தால் அதை பிறருக்கு கூறுவதும் அழைப்பு பணிதான். இதை உணராத பலர், அழைப்ப பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர். இது தவறாகும். நாம் நமது நண்பர் நண்பிகளை சந்திக்கும் போதும் அவர்களை எமது வீட்டிற்கு விருந்துக்கு அழைக்கும் போதும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்து செல்லலாம். பேச்சோடு பேச்சாக சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன் வைக்கலாம். இப்படி அவர்களிடம் காணப்படும் தவறுகளை களைய முற்பட வேண்டும்.

இதற்கு யூசுப் (அலை) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாக கூறலாம். நபி யூசுப் (அலை) அவர்கள் சிறையில் நீண்ட காலமாக இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவின் விளக்கத்தை கூறுவதற்கு முன்னர் பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாழ்பவன் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பை பதியச் செய்தார்கள். இதனை தொடர்ந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை, அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும். அதுதான் சரியான மார்க்கம் என்ற கருத்தை முன் வைத்தார்கள்.

இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்தவர்களிடமே யூசுப் (அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதை காணலாம். இத்தகைய வாய்ப்புகள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்.

அழைப்புப்பணி ஹிக்மத்தோடு (அறிவோடு) ஆற்ற வேண்டிய பணியாகும். அன்பான, கனிவான பேச்சு, எதிர் கருத்துள்ளவர்களையும் மதிக்கும் மனோபான்மை, இரக்க குணம், ஈகை, கருணை, பொறுமை, பணிவு போன்ற உயரிய பண்புகள் மூலம் நபி(ஸல்) அவர்களின் அழைப்பு பணி பொலிவு பெற்றது..

அழைப்பு பணியில் ஈடுபடுவோர் தமது பிரச்சார இலக்காக எதை கொள்ளலாம் என்பதை உறுதியாக தீர்மானிக்க வேண்டும். அப்படி தீர்மானிக்கும் போது, முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளித்து பேசவேண்டியவைகளுக்கு அதற்குரிய இடம்பார்த்து பேச வேண்டும். ஒரு இடத்தில் இணைவைக்கப்படுகின்றது என்று வைத்து கொள்ளுங்கள், அங்கே தொழுகை பற்றியோ இன்னபிற வணக்கங்கள் பற்றியோ பேசுவது பொருத்தமல்ல,

No comments:

Post a Comment