125x125 Ads1

125x125 Ads1

Thursday, September 29, 2011

அழைப்புப் பணியின் முதற்படி التوحيد أولا يادعاة الإسلام!! (1)

அழைப்புப் பணி என்பது மிகவும் உன்னதமான புனிதமான பணியாகும். இப்பணி மிகவும் பரந்து, விரிந்த ஒரு களமாகும் என்று கூறினால் மிகையாகாது! இதன் வெற்றியே மார்க்கத்தின் வெற்றியாகும். எனவே, இப்பாரிய களத்தின் முதற்படி என்ன? இப்பணியை எங்கிருந்து, எதிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்? போன்ற வினாக்களுக்குரிய விடைகளை அறிந்திருப்பது அழைப்பாளர்களைப் பொறுத்த வரையில் மிக முக்கியமான விடயமாகும்.
அப்போது தான் மிக, மிக முக்கியமான விடயத்துக்கு முதலில் அழுத்தம் கொடுத்து விட்டுப், பின்னர் அதற்கடுத்த படியான முக்கிய விடயத்துக்கு அழுத்தம் கொடுக்க முடியும். பின்பு அதற்கடுத்த படியான நிலையில் உள்ள விடயத்திற்கு என படிப்படியாக அதற்கடுத்த படித்தரத்தில் உள்ள ஏனைய விடயங்களுக்கு அழுத்தம் கொடுக்க முடியும். இவ்வாறு படிப்படியான முக்கியத்துவம் மிக்கவைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் அணுகுமுறையே தஃவாப் பணியின் சிறந்த முறையாகும் என்பதை அல்குர்ஆன், சுன்னாவிலும் நேர்வழி நடந்த நல்லோரது வழிமுறைகள் போன்றவற்றிலும் காணமுடிகின்றது.
நபிமார்கள் பலரின் சரிதைகளை அல்குர்ஆன் அழகான முறையில் எமக்குக் கற்றுத்தந்துள்ளது. அவர்கள் தமது சமுதாயத்தினருடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள், அவர்களது அழைப்புப் பணியின் பாங்கு எப்படி அமைந்திருந்தது? முதலில் எதன்பால் மக்களை அழைத்தார்கள் போன்ற அனைத்தையுமே நபிமார்கள் பற்றி அல்குர்ஆனில் இடம் பெற்றுள்ள கதைகளில் காணமுடிகின்றது. ஆம்! அவர்கள் அனைவருமே முதன்முதலில் தம் சமுதாயத்தினரை ஏகத்துவத்தின்பால் அழைத்துள்ளார்கள். அதன் பின்னரே தம் சமுதாயத்தில் காணப்பட்ட குறித்த தவறுகளை விட்டும் நீங்கி விடும்படி போதனை செய்துள்ளனர். கீழ்வரும் திருமறை வசனங்கள் அனைத்தும், நபிமார்களது தஃவாவின் முதற்படியாக ஏகத்துவக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகவே அமைந்திருந்தது என்பதைத் தெளிவு படுத்துகின்றன.
இவ்வகையில் இப்பணியின் முதற்படியாகத் திகழ்வது ஏகத்துவமாகும். அதாவது, ஓரிறைக் கொள்கையின்பால் மக்களை அழைப்பதாகும். அதாவது வணக்கத்துக்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு இல்லை என்பதே இக்கொள்கையின் அடிப்படையாகும். எனவே, சகல வணக்க, வழிபாடுகளையும் இறைவன் ஒருவனுக்கு மாத்திரமே செய்து, அவை அனைத்தினூடாகவும் அவன் ஒருவனையே ஓர்மைப் படுத்துவதாகும். எனவே, இம்மகத்தான கொள்கையின்பால் அழைப்பதே அனைத்தையும் விட முதன்மையானதாகும்.
لَقَدْ أَرْسَلْنَا نُوحًا إِلَى قَوْمِهِ فَقَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللَّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ عَذَابَ يَوْمٍ عَظِيمٍ
“நிச்சயமாக நாம் நூஹை அவருடைய கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தோம்; அவர் (தம் கூட்டத்தாரிடம்) “என் கூட்டத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள், உங்களுக்கு அவனன்றி வேறு நாயனில்லை; நிச்சயமாக நான் உங்களுக்கு வர இருக்கும் மகத்தான ஒரு நாளின் வேதனை பற்றி அஞ்சுகிறேன்” என்று கூறினார். (அல்-அஃராஃப்: 59)
وَإِلَى عَادٍ أَخَاهُمْ هُودًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ إِنْ أَنتُمْ إِلاَّ مُفْتَرُونَ
“ஆது” சமூகத்தாரிடம், அவர்களுடைய சகோதரர் ஹூதை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் சொன்னார்: “என்னுடைய சமூகத்தாரே! அல்லாஹ்வையே நீங்கள் வணங்குங்கள்; அவனன்றி (வேறு) இறைவன் உங்களுக்கு இல்லை; நீங்கள் பொய்யர்களாகவே தவிர வேறில்லை. (ஹூது: 50)
‘இன்னும் இப்ராஹீமையும் (தூதராக நாம் அனுப்பினோம்.); அவர் தம் சமூகத்தாரிடம்: அல்லாஹ்வை நீங்கள் வணங்குங்கள்; அவனிடம் பயபக்தியுடன் இருங்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு நன்மையுடையதாக இருக்கும்.’ என்று கூறிய வேளையை (நபியே!) நினைவூட்டுவீராக! (அல்-அன்கபூத்: 16)
¨ நபி நூஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஹூத் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
¨ நபி ஸாலிஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى ثَمُودَ أَخَاهُمْ صَالِحًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
“ஸமூது கூட்டத்தாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்.); அவர் (அவர்களை நோக்கி) ‘என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (அல்-அஃராஃப்: 73)
¨ நபி இப்ராஹீம் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِبْرَاهِيمَ إِذْ قَالَ لِقَوْمِهِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِن كُنتُمْ تَعْلَمُونَ
¨ நபி யஃகூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
أَمْ كُنتُمْ شُهَدَاءَ إِذْ حَضَرَ يَعْقُوبَ الْمَوْتُ إِذْ قَالَ لِبَنِيهِ مَا تَعْبُدُونَ مِن بَعْدِي قَالُواْ نَعْبُدُ إِلَهَكَ وَإِلَهَ آبَائِكَ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ إِلَهًا وَاحِدًا وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ
யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்: ‘எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?’ எனக் கேட்டதற்கு, ‘உங்கள் நாயனை உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை – ஒரே நாயனையே – வணங்குவோம்; அவனுக்கே (முற்றிலும்) வழிபட்ட முஸ்லிம்களாக இருப்போம்.’ எனக் கூறினர். (அல்-பகரா: 133)
¨ நபி யூஸூப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَاتَّبَعْتُ مِلَّةَ آبَائِي إِبْرَاهِيمَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ مَا كَانَ لَنَا أَن نُّشْرِكَ بِاللّهِ مِن شَيْءٍ ذَلِكَ مِن فَضْلِ اللّهِ عَلَيْنَا وَعَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَشْكُرُونَ . يَا صَاحِبَيِ السِّجْنِ أَأَرْبَابٌ مُّتَفَرِّقُونَ خَيْرٌ أَمِ اللّهُ الْوَاحِدُ الْقَهَّارُ . مَا تَعْبُدُونَ مِن دُونِهِ إِلاَّ أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنتُمْ وَآبَاؤُكُم مَّا أَنزَلَ اللّهُ بِهَا مِن سُلْطَانٍ إِنِ الْحُكْمُ إِلاَّ لِلّهِ أَمَرَ أَلاَّ تَعْبُدُواْ إِلاَّ إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لاَ يَعْلَمُونَ
‘நான் என் மூதாதையர்களான இப்றாஹீம், இஸ்ஹாக், யஃகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகின்றேன்; அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்கு தகுமானதல்ல; இது எங்கள் மீதும் (இதர) மக்கள் மீதும் அல்லாஹ் புரிந்த அருளாகும். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் (அல்லாஹ்வுக்கு) நன்றி செலுத்துவதில்லை. சிறையிலிருக்கும் என் இரு தோழர்களே! வெவ்வேறான பல தெய்வங்கள் இருப்பது நல்லதா? அல்லது (யாவரையும்) அடக்கி ஆளுகின்ற ஒருவனான அல்லாஹ்வா? ‘அவனையன்றி நீங்கள் வணங்கிக் கொண்டிருப்பவை யாவும் நீங்களும் உங்கள் மூதாதையரும் வைத்துக்கொண்ட (வெறும் கற்பனைப்) பெயர்களேயன்றி வேறில்லை; அவற்றுக்கு அல்லாஹ் யாதொரு ஆதாரத்தையும் இறக்கி வைக்கவில்லை; அல்லாஹ் ஒருவனுக்கேயன்றி (வேறெவர்க்கும்) அதிகாரமில்லை. அவனையன்றி (வேறு எவரையும்) நீங்கள் வணங்கக் கூடாது என்று அவன் (உங்களுக்கு) கட்டளையிட்டிருக்கின்றான். இதுவே நேரான மார்க்கமாகும்; ஆனால். மனிதர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்துகொள்வதில்லை. (யூஸூஃப்: 38 – 40)
¨ நபி ஷுஐப் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُواْ اللّهَ مَا لَكُم مِّنْ إِلَهٍ غَيْرُهُ
மத்யனி (நகரத்தி) லுள்ளவர்களுக்கு, அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக) அனுப்பி வைத்தோம். அவர் (அவர்களிடம் என்) சமூகத்தவர்களே, அல்லாஹ் (ஒருவனையே) நீங்கள் வணங்குங்கள். அவனைத் தவிர உங்களுக்கு வேறு நாயன் இல்லை. (ஹூது : 84)
¨ நபி மூஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
قَالَ أَغَيْرَ اللّهِ أَبْغِيكُمْ إِلَهًا وَهُوَ فَضَّلَكُمْ عَلَى الْعَالَمِينَ
அன்றியும், அல்லாஹ் அல்லாத ஒன்றையா நான் உங்களுக்கு இறைவனாகத் தேடி வைப்பேன்? அவனோ உங்களை உலகத்திலுள்ள எல்லா மக்களையும் விட மேன்மையாக்கி வைத்துள்ளான்.’ என்றும் அவர் கூறினார். (அல்-அஃராஃப்: 140)
¨ நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:
إِنَّ اللّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُّسْتَقِيمٌ
‘நிச்சயமாக அல்லாஹ்வே என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனும் ஆவான்; ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே (ஸிராத்துல் முஸ்தக்கீம் என்னும்) நேரான வழியாகும்.’ (ஆல இம்ரான்: 51)

No comments:

Post a Comment